திருநெல்வேலியில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி சார்பில் போலீசாருக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ஆலோசனைப்படி, போலீசாருக்கு அரசு சித்த மருத்துவ கல்லூரி சார்பில் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. மாநகர ஆயுதப்படை காவலர்கள் மற்றும் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட அனைத்து காவல் நிலைய ஆளிநர்கள் அனைவரும் பயன்பெறும் நோக்கில் தொடர்ந்து 9 நாட்கள் கபசுரக்குடிநீர் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் கண்ணன், மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டனர், உடன் ஒருங்கிணைப்பாளர் சைபர் பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.