பாளையங்கோட்டை பஸ் நிலைய வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: பரபரப்பு

நெல்லை பாளையங்கோட்டை பேருந்து நிலைய வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Update: 2022-04-18 01:00 GMT

பாளையங்கோட்டை பேருந்து நிலைய வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட இடத்தை பார்வையிட்டு விசாரித்த போலீசார்.

நெல்லை பாளையங்கோட்டை பேருந்து நிலையம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா கண்டது. பாளையங்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கின. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தற்போது பாளையங்கோட்டை பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் திறப்பு விழா கண்ட பின்னும் அந்த வளாகத்தில் உள்ள கடைகள் அதிக வாடகை பிரச்சினை காரணமாக முழுமையாக திறக்கப்படவில்லை. இதனால் வழக்கமான பரபரப்பு இன்றி மக்கள் நடமாட்டம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

இந்நிலையில்,  நேற்று இரவு பேருந்து நிலைய வளாகத்தில் இயங்கும் ஒரு பழ ஜூஸ் கடைக்கு அருகில்,  மர்ம நபர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசி உள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு நேரம் என்பதாலும், பேருந்துகள் இயக்கமும், மக்கள் நடமாட்டமும் இல்லை. இதனால் வெடிகுண்டு வெடித்ததில் யாருக்கும் காயமும் இல்லை, பேருந்து நிலையத்திலும் எந்த சேதமும் ஏற்படவில்லை.

இருப்பினும், நாட்டு வெடிகுண்டு வீசிய நபர் யார் ? எங்கு தயாரித்தார் ? இதனை வேறு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்த்த தயாரித்து சோதனை செய்தார்களா என்பது போன்ற பல்வேறு கேள்விகளுடன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பேரூந்து நிலைய வளாகத்தில் உள்ள அனைத்து சிசிடிவிக்களிலும் பதிவான காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News