நெல்லை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நெல்லையில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-31 07:30 GMT
 நெல்லையில் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர். 

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு  விலை உயர்வ கண்டித்து  காங்கிரஸ் கட்சி, இன்று  நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது.  அவ்வகையில், திருநெல்வேலி காங்கிரஸ் கட்சி சார்பில் பாளையங்கோட்டை ஜோதிபுரத்தில் நூதன போராட்டம் நடைபெற்றது.

இருசக்கர வாகனம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவைகளுக்கு மாலை அணிவித்து மணியடித்து, ஒப்பாரி வைத்து விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த நூதனப் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் மற்றும் டியூக் துரைராஜ், கண்ணன், ராஜேஷ்முருகன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News