தேர்தல் பணியில் ஈடுபட்ட வெளிமாநிலத்தை சேர்ந்த 6 பேர் கைது

பாளையங்கோட்டை ஒன்றியம் மேலபுத்நேரியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட வெளி மாநிலத்தைச் சேர்ந்த 6 பேரை எஸ்பி மணிவண்ணன் கைது செய்தார்.

Update: 2021-10-06 05:00 GMT

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார். 

நெல்லை மாவட்டத்தில் 15 ஒன்றியங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனையொட்டி மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன் வாக்குச்சாவடிகளை திடீரென ஆய்வு செய்து வந்தார். அப்போது பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல புத்தநேரியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் வாக்குச்சாவடி அருகே தேர்தல் பணியில் ஈடுபட்ட வெளிமாவட்டத்தை சேர்ந்த ஆறு நபர்களை கைது செய்தார்.

Tags:    

Similar News