பாளையங்கோட்டை ஊராட்சியில் 14 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

Update: 2021-10-20 15:45 GMT

பைல் படம்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 14 ஒன்றிய கவுன்சிலர் பதவி உள்ளது. இதில் போட்டியிட்ட திமுக ஒன்பது இடங்களில் தனித்து வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு இடத்திலும், அதிமுக ஒரு இடத்திலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர்.

இவர்களின் பதவியேற்பு விழா இன்று பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

3வது வார்டு குமரேசன், நாலாவது வார்டு திருப்பதி, அஞ்சாவது வார்டு தெய்வானை, ஆறாவது வார்டு தங்கபாண்டியன், ஏழாவது வார்டு பகவதி ,எட்டாவது வார்டு ராஜாராம், 10வது வார்டு ராமகிருஷ்ணன், 13-வார்டு நம்பிராஜன், 13வது வார்டு ராமலட்சுமி 14வது வார்டு பூவம்மாள் ஆகிய திமுக ஒன்றிய கவுன்சிலர்களும்,

அதிமுக ஒன்றிய கவுன்சிலர் முத்துக்குமார் வெற்றி பெற்றார். திமுக கூட்டணியில் 2-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற காங்கிரஸ் கவுன்சிலர் தெய்வானை, 9வது வார்டிடு சுயோட்சை கவுன்சிலர் சரஸ்வதி உள்ளிட்ட 14 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு தேர்தல் அதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Tags:    

Similar News