நெல்லை மகாராஜா பிள்ளையின் 50வது நினைவு நாள் அனுசரிப்பு

பாளையங்கோட்டை நகர சபையின் முன்னாள் தலைவர் maharaja.in 50வது நினைவு நாள். திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

Update: 2021-07-19 10:13 GMT

நெல்லை மகாராஜா பிள்ளையின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த எம்எல்ஏ அப்துல் வகாப்.

நெல்லை மகாராஜா பிள்ளையின் 50வது நினைவு நாளையொட்டி, எம்எல்ஏ அப்துல் வகாப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நெல்லை பாளையங்கோட்டை நகர சபையின் முன்னாள் தலைவர் மகாராஜா பிள்ளை. இவரின் 50வது நினைவு நாள்  இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு, ஐகிரவுண்ட் பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வகாப் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், பகுதி செயலாளர்கள் செல்லத்துரை , துபாய்சாகுல் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News