நெல்லை: தூய்மை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தினசரி சம்பளமாக ரூ 634 நிர்ணயம் செய்யக் கோரி நெல்லையில் தூய்மை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.;

Update: 2021-02-26 09:56 GMT

நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாவட்ட தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்றது. குப்பைகளை தரம் பிரிக்க கட்டாயப் படுத்தக் கூடாது. பிடித்தம் செய்யப்பட்ட இபிஎப் பணம் முழுவதையும் மாத மாதம் குறிப்பிட்ட அலுவலகத்தில் முழுமையாகச் செலுத்த வேண்டும். தூய்மைப் பணியாளர்களின் பணியை நிரந்தரமாக்க வேண்டும். சம்பளத்துடன் வாரவிடுமுறை வழங்க வேண்டும். தமிழக அரசு உத்தரவுபடி தினசரி சம்பளமாக ரூ. 634 நிர்ணயம் செய்ய வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தூய்மை தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News