நெல்லை : மத்திய தொழிலாளர் கல்வி வாரியம் மூலம் மகளிருக்கு விழிப்புணர்வு பயிற்சி

இப்பயிற்சியில் கொரோனா நோய், எச்.ஐ.வி, காசநோய் , சிறு சேமிப்பு திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

Update: 2021-07-29 16:49 GMT

மத்திய தொழிலாளர் கல்வி வாரியத்தின் சார்பில் மகளிருக்கு கொரோனா மற்றும் மத்திய, மாநில திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது .

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், ரெட்டியார்பட்டி கிராமத்தில், மத்திய தொழிலாளர் கல்வி வாரியத்தின் சார்பாக மகளிர் குழுவில் உள்ள மகளிருக்கு விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சியில், கொரோனா நோய், எச்.ஐ.வி, காசநோய் குறித்த விழிப்புணர்வும், சிறு சேமிப்பு, மத்திய, மாநில அரசு நலத் திட்டங்கள் குறித்தும் விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இப்பயிற்சிக்கு சிறப்பு விருந்தினராக சுகாதாரத் துறை அதிகாரிகள் ராஜா தனபால் துரை,  முத்துலட்சுமி மற்றும் ஊரக வளர்ச்சி துரை கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சியை, மத்திய தொழிலாளர் கல்வி அதிகாரி ரவி சங்கர் ஏற்பாடு செய்திருந்தார். பயிற்சியின் முடிவில் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பொன்பாண்டி நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News