சீவலப்பேரி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

சீவலப்பேரி கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது. செய்யப்பட்டார்.

Update: 2021-04-29 15:30 GMT

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீவலப்பேரி சுடலை மாடசாமி கோவில் பூசாரி சிதம்பரம் என்ற துரை(41). கோவிலில் கடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட  முன் விரோதம் காரணமாக கடந்த 18.04.2021 அன்று மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவுபடி தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்யும்படி உத்தரவிட்டார்.

இதனடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து கொலையில் ஈடுபட்ட 12 எதிரிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்..

மேலும் இக்கொலையில் ஈடுபட்ட எதிரியான சீவலப்பேரியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் துர்கை ராஜ் என்ற டர்போ துர்கை(27) என்பவரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். மொத்தம் இக்கொலை வழக்கில் இதுவரை துர்கைராஜ் உட்பட 13 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News