உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றங்கரையில் மரக்கன்றுகள் நடவு

முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் கருவேல மரங்களை அகற்றி மரக்கன்றுகள் நடும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

Update: 2022-03-22 15:30 GMT

 தாமிரபரணி ஆற்றங்கரையில்  மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை  நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு  தொடங்கி வைத்தார்

முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கருவேல மரங்களை அகற்றி மரக்கன்றுகள் நடும் விழா.

நெல்லை மாவட்டம், முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கருவேல மரங்களை அழித்து மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமை  வகித்து, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.முக்கூடல் பேருராட்சித் தலைவர் ராதா, துணைத் தலைவர் லட்சுமணன், செயல் அலுவலர் கந்தசாமி, தாய் வீடு தொண்டு நிறுவனம், பசுமை இயக்கம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்

Tags:    

Similar News