தமிழக முதல்வர் பதவியேற்று ஓராண்டு சாதனை: மேலச்செவலில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

மேலச்செவலில் தமிழக முதல்வர் பதவி ஏற்று ஓராண்டு சாதனை மற்றும் நிறைவையொட்டி தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

Update: 2022-05-07 11:29 GMT

மேலச்செவல் பஸ் நிலையத்தில் இலவச தண்ணீர் பந்தலை தலைமைச் செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் திறந்து வைத்தார்.

நெல்லை மாவட்டம் மேலச்செவலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு சாதனை மற்றும் நிறைவானதையொட்டி திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலச்செவல் பஸ் நிலையத்தில் நடந்த இவ்விழாவில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமையேற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். முன்னதாக கோடை காலத்தையொட்டி மேலச்செவல் பஸ்நிலையத்தில் இலவச தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இதில் திமுக கட்சியின் பிரமுகர் கணேஷ்குமார் ஆதித்தன், சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி என்ற பிரபு, மேலச்செவல் பேரூராட்சித் தலைவர் அன்னபூரணி, மேலச்செவல் நகரச் செயலாளர் மணிகண்டன், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வேல்முருகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சீவலமுத்து என்ற குமார், வக்கீல் கூனியூர் பிரகாஷ், சேரன்மாதேவி பேரூராட்சி துணைத்தலைவர் மாரி, மேலச்செவல் நகரத் துணைச் செயலாளர்கள் பரமசிவம், தங்கம் ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் கருப்பசாமிபாண்டியன், கந்தசாமி, கவுன்சிலர் கருப்பசாமி மற்றும் திரளான தி.மு.கவினர் கலந்து கொண்டனர். இதற்கான விழா ஏற்பாடுகளை மேலச்செவல் தவசி மணிகண்டன் சிறப்பாக செய்திருந்தார்.

Tags:    

Similar News