கல்லிடைக்குறிச்சி பெரிய பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

கல்லிடைக்குறிச்சி பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா பங்கேற்றார்.

Update: 2022-04-25 13:38 GMT

கல்லிடைக்குறிச்சி பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பெரிய பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளிவாசல் மதர்ஷா ஹாலில் வைத்து நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு பள்ளிவாசல் தலைவர் கே.எஸ் அப்துல் மஜித் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மைனர் சேக் முஹைதீன் முன்னிலை வகித்தார். நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

சிறப்பு விருந்தினராக அப்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா, சேரன்மகாதேவி ஒன்றிய அதிமுக செயலாளர் மாரிச் செல்வம், மாநில பேச்சாளர் மின்னல் மீனாட்சி, கல்லிடை நகர அதிமுக செயலாளர் கண்ணன் என்ற முத்துக்கிருஷ்ணன், பள்ளிவாசல் தலைமை இமாம் அஹமது மைதீன் ஆகியோர் உட்பட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பெரிய ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News