வாகன ஓட்டுனர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு

Update: 2021-04-19 10:30 GMT

திருநெல்வேலி மாவட்டத்தில் வாடகை வாகன ஓட்டுனர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட எஸ்பி., மணிவண்ணன் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கொரோனா குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விகே புரத்தில் வாடகை வாகன ஓட்டுநர்கள் மற்றும் வியாபாரிகளிடம் மாஸ்க் அணிதல், கையுறை அணிதல், அடிக்கடி கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கொரோனா தடுப்பு முறைகள் குறித்து வி.கே புரம் இன்ஸ்பெக்டர் சண்முகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவருக்கும் சத்து மாத்திரைகள் வழங்கினார்.

Tags:    

Similar News