நெல்லை: கொள்ளை மற்றும் கொலை வழக்குகளில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
கொள்ளை மற்றும் கொலை வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.;
கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நெல்லை மாவட்டம், வி.கே. புரம் காவல் நிலையத்தில் கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்ட நெல்லை டவுண் பாரதியார் தெருவை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் இசக்கிமுத்து என்ற கொம்பையா (19) கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கவனத்திற்கு வந்தது.
அதன் அடிப்படையில், குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வி.கே. புரம் காவல் ஆய்வாளர் சீதாலட்சுமிக்கு அறிவுறுத்தினார். அதன்பேரில் இசக்கிமுத்து என்ற கொம்பையா மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படியும், மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரிலும் குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.