கொரோனா பரவலை தடுப்பது குறித்து விழிப்புணர்வு

Update: 2021-04-22 12:45 GMT

திருநெல்வேலியில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவாமல் தடுக்க பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்ட எஸ்பி., மணிவண்ணன், அறிவுரையின்படி திருநெல்வேலி மாவட்ட வி.கே.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் அத்தியாவசிய தேவைக்காக பொதுமக்கள் வந்து செல்லும் முக்கிய இடங்களுக்கு சென்று தங்களுக்கும், தங்களைச் சார்ந்தவர்களுக்கும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நோய் தொற்று பரவாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், மாஸ்க் அணிவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறி, பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் குடிநீர் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News