விக்கிரமசிங்கபுரத்தில் அதிமுக பொதுக்கூட்டம்

கூட்டத்திற்கு விக்கிரமசிங்கபுரம் நகர அதிமுக செயலாளர் கண்ணன் என்ற பலவேசம் தலைமை வகித்தார்

Update: 2023-03-09 16:00 GMT

விக்கிரமசிங்கபுரத்தில் அதிமுக பொதுக்கூட்டத்தில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா பேசினார்

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள தேரடித் திடலில் வைத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம்ந டைபெற்றது.

கூட்டத்திற்கு விக்கிரமசிங்கபுரம் நகர அதிமுக செயலாளர் கண்ணன் என்ற பலவேசம் தலைமை வகித்தார். முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான இசக்கி சுப்பையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக எம்எல்ஏ இசக்கி சுப்பையாவுக்கு மலர் கிரிடம் வைத்து ஆள் உயர மாலை அணிவித்து அக்கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.கூட்டத்தில் அவைத் தலைவர் அரிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி கல்யாண சுந்தரம், வார்டு கவுன்சிலர் வைகுண்ட லட்சுமி, மகளிர் அணி செயலாளர் இமாக்குலேட், வழக்கறிஞர்கள் ஸ்டாலின், சுரேஷ் கிளைக் கழக செயலாளர் ராமச்சந்திரன், மாநில பேச்சாளர் மின்னல் மீனாட்சி,

இலக்கிய அணி கூனியூர் மாடசாமி, மகளிர் அணி குமுதா பெருமாள், சேரன்மகாதேவி ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், மணிமுத்தாறு சிவன் பாபு மற்றும் மதுரா கோட்ஸ் தொழிற்சங்க நிர்வாகிகள், அதிமுக ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், வழக்கறிஞர் அணியினர், மாணவர் அணியினர் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News