சிறந்த சிலம்பாட்ட பாரம்பரிய கலை வீரர்களுக்கு சாதனை ஸ்ரீ பட்டம்
சேரன்மகாதேவியை சேர்ந்த சிறந்த சிலம்பாட்டம் மற்றும் பாரம்பரிய கலை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற ருத்ரா சாந்தி யோகாலயா டிரஸ்ட் மற்றும் சுற்றுலாத் துறையும் இணைந்து யோகா மற்றும் பாரம்பரிய கலை விழா போட்டிகள் நடத்தியது.
இந்த விழாவில் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்த முகமது இஸ்மாயில் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி மாணவர்கள் மற்றும் ஏ.பி.ஜே அப்துல் கலாம் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு சுற்றுலாத்துறை அலுவலர் ஜெகதீஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பாரம்பரிய கலையை சிறப்பாக செய்து காட்டிய மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
ருத்ரா சாந்தி யோகாலயா டிரஸ்ட் நிறுவனர் கிருஷ்ணகுமார் சிறந்த சிலம்பாட்ட மாணவர்களுக்கு சாதனை ஸ்ரீ பட்டம் வழங்கி சிறப்பித்தார்.