அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

அடுத்த இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-15 08:59 GMT

பைல் படம்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில், அடுத்த இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தின் பெரம்பலூர், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையுடன் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை டுவிட்டர் பதிவிலும் எச்சரிக்கை செய்து பதிவிட்டுள்ளது.

Tags:    

Similar News