அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-03-31 10:38 GMT

பைல் படம்.

தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் திண்டுக்கல், திருப்பூர், திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.



Tags:    

Similar News