டூ வீலர் மீது டிராக்டர் மோதி வாலிபர் பலி: தேனி அருகே பரிதாபம்

தேனி, உத்தமபாளையத்தில் டூ வீலர் மீது டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.

Update: 2022-03-15 02:15 GMT

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அம்மாபட்டி காலனி தெருவை சேர்ந்தவர் கருமலை, 27. இவர் சென்ட்ரிங் வேலைக்கு சென்று வி்ட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

சம்பவத்தன்று, எஸ்.தர்மத்துப்பட்டி ரோட்டில்,  டூ வீலரில் வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த டிராக்டர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கருமலை உயிரிழந்தார். போடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News