கூடலூர் நகராட்சியில் காட்சிப்பொருளாக மாறிய கண்காணிப்பு கேமராக்கள்

கூடலுார் நகராட்சியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் அது செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது.

Update: 2021-10-17 11:31 GMT

கூடலுார் நகராட்சியில் செயல்படாத கண்காணிப்பு கேமராக்கள்

தேனி மாவட்டம் கூடலுார் நகராட்சியில் போலீஸ் நிர்வாகம் சார்பில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த கேமராக்கள் நீண்ட காலமாக செயல்படாமல் இருப்பதால் தற்போது அவை வெறும் காட்சி பொருளாக மட்டுமே உள்ளன.

இதனால் திருட்டுக்குற்றங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் குற்றவாளிகளை கண்டறியும் முயற்சி பலனளிக்கவில்லை. இந்த கேமராக்களை செயல்படுத்த தேனி எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் சமூக குற்றங்கள் குறையும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News