கேரளாவுக்கு கடத்திய 12 கிலோ கஞ்சா பறிமுதல்; கடத்தல் கும்பல் சிக்கியது

கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்பட்ட 12 கிலோ கஞ்சாவுடன், இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-08-04 07:45 GMT

கஞ்சா கடத்தலில் போலீசாரால் கைது செய்யப்பட்ட 4 பேர்.

கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு ஆட்டோவில் கஞ்சா கடத்திச் சென்ற இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டம், கம்பத்தில் இருந்து கூடலுார் எள்ளுக்காட்டுப்பாறை வழியாக ஆட்டோவில் கஞ்சா கடத்திச் செல்வதாக குமுளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து  எஸ்.ஐ., சுதாகரன் தலைமையில் போலீசார், காஞ்சிமரத்துறை பாலம் கீழ கண்ணகி கோயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கேரளா நோக்கி சென்ற ஆட்டோவினை சோதனையிட்டனர்.

அதில் பனிரெண்டு கிலோ கஞ்சா இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா கடத்தியதாக  கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்த சுகப்பிரியா, மந்தையம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஈஸ்வரி, மற்றும் குபேந்திரன், சிவகாமன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News