தேனி மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா பாதிப்பு: 15,450 பேருக்கு தடுப்பூசி

தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இன்று நடத்தப்பட்ட பரிசோதனைகளின் படி 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது

Update: 2021-10-18 07:15 GMT

தேனி மாவட்டத்தில் இன்று இரண்டு பேருக்கு மட்டுமோ கொரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளது.

தேனி மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் படி, இன்று தேனி மாவட்டத்தில் ஒருவருக்கும், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் ஆக 2 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் இரண்டு பேரையும் சேர்த்து தற்போது தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 5 பேர் மட்டுமே கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இன்று மாவட்டத்தில் 90 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு 15 ஆயிரத்து 450 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News