குவாரியில் கல் உடைக்கும் உரிமம் கோரி சுய உதவிக்குழுவினர் ஆர்ப்பாட்டம்

குவாரி உரிமம் கேட்டு, மகளிர் சுய உதவிக்குழுவினர் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-01 11:45 GMT

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடத்திய மகளிர் குழுவினர்.

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக மகளிர் சுய உதவிக்குழுவினர், குவாரிகளில் கல் உடைக்கும் உரிமத்தை வழங்க வேண்டும் என கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

உத்தமபாளையம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி சங்கிலி கருப்பன் தண்ணீ்ர்பாறை கல் உடைக்கும் சங்கத்தின் சார்பாக செயலாளர் கவுரி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில்,  50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின்னர் இவர்கள் இந்த கோரிக்கையினை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Tags:    

Similar News