தேனி மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு காெராேனா தாெற்று உறுதி

தேனி மருத்துவக்கல்லுாரி ஆய்வகத்தில் இன்று ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

Update: 2021-10-16 05:18 GMT

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தில் நேற்று 575 பேருக்கு கொரோனா நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது.

இதன்படி ஒரே ஒரு நபருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியானது. தற்போது 8 பேர் மட்டுமே தேனி மாவட்டத்தில் சிகிச்சையில் உள்ளனர். கடந்த சில நாட்களாகவே கொரோனா இறப்பு எதுவும் பதிவாகவில்லை என தேனி மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News