டாஸ்மாக் மதுபானங்கள் விலை இன்று முதல் உயர்வு

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்கிறது.

Update: 2022-03-07 02:15 GMT

பைல் படம்.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்கிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கன்வே டாஸ்மாக்கில் ஊழியர்கள் மதுபாட்டில்களை அதிகவிலைக்கு விற்று வருவதாக புகார்கள் தெரிவித்த நிலையில் தமிழக அரசே திடீரென விலையை உயர்த்தியுள்ளதால் குடிமகன்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தமிழக அரசு அறிவித்துள்ள இந்த புதிய விலைப்பட்டியல் குறித்த விவரங்களை இன்று மேற்பார்வையாளர்கள் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News