சம்பள பணத்தை மாணவர்களுக்கு உதவிதொகையாக வழங்கினார் எம்.எல்.ஏ. இனிகோ

தனது சம்பள பணத்தை மாணவர்களுக்கு உதவிதொகையாக வழங்கினார் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ.

Update: 2022-09-12 10:42 GMT

தனது சம்பள பணத்தை ஒரு மாணவனுக்கு கல்வி உதவி தொகையாக இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்.

திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. தமிழகத்திலேயே ஒரு முன்மாதிரி சட்டமன்ற உறுப்பினராக திகழ்ந்து வருகிறார். தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செல்லும் அவர் மக்களிடம் குறைகளை நேரடியாக கேட்டறிந்து உடனுக்குடன் தீர்த்து வருகிறார். முதல்வர் மு.க. ஸ்டாலின் எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதியில் உள்ள தீர்க்கப்படாத 10 கோரிக்கை தொடர்பாக மனு அளிக்க உத்தரவிட்டபோது தமிழகத்திலேயே முதன் முதலாக திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் தனது கோரிக்கை மனுவை அளித்து தொகுதி மக்களின் பாராட்டை பெற்றார்.


மேலும் இனிகோ இருதயராஜ் சட்டமன்ற உறுப்பினருக்கான தனது  சம்பள பணம் முழுவதையும் தொகுதியில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி தொகயைாக  பகிர்ந்தளித்து வருகிறார். அதன்படி நேற்று தனது சட்டமன்ற அலுவலகத்தில் தனது சம்பளப் பணம் சுமார் ரூ. 6லட்சத்தை உதவி கேட்ட அனைத்து மாணவர்களுக்கும் பகிர்ந்தளித்தார்.

இந்த நிகழ்வின்போது  தி.மு.க .மாநகர செயலாளரும் 3-வது மண்டல குழு தலைவருமான மு. மதிவாணன், 2-வது மண்டல குழு தலைவர் பி.ஜெய நிர்மலா, வட்டக் கழக செயலாளர்கள். சிவகுமார்,ஜெயச்சந்திரன்,எம்.ஐ.டி. சாகுல் அமீது, மற்றும் கழக நிர்வாகிகள் கழகத் தோழர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News