ஒண்டிவீரன் 250-வது நினைவு தினம்: 144 தடை உத்தரவு - காவல்துறை அறிவிப்பு

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 250-வது நினைவு தினம். 144 தடை உத்தரவு உள்ளதால் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை காவல்துறை அறிவிப்பு

Update: 2021-08-17 15:00 GMT

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 250-வது நினைவு தினம். 144 தடை உத்தரவு உள்ளதால் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை காவல்துறை அறிவிப்பு.

தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவலில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 250 நினைவு தினம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி கடைபிடிக்க உள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் வருகின்ற 20.08.2021 அன்று ஒண்டிவீரன் அவர்களின் நினைவு தினத்தில் தென்காசி மாவட்டம் மற்றும் வெளி மாவட்ட பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதி இல்லை.

எனவே பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.மீறி கலந்து கொள்ளும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News