புளியங்குடியில் மோட்டார்பைக் திருடிய நபர் கைது

Update: 2021-04-10 07:45 GMT

புளியங்குடியில் மோட்டார்பைக்கை திருடிய நபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் எல்லைக்குட்பட்ட டிஎன் புதுக்குடி பகுதியில் மனோகரன் என்பவர் கடந்த ஏப் 7 ம் தேதி அன்று அவரது வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த அவரது பைக் திருடு போனதாக புளியங்குடி போலீசில் புகார் அளித்ததை அடுத்து திருமலாபுரம் பகுதியை சேர்ந்த திருமலைசாமி என்பவரின் மகன் கருப்பசாமி என்பவரை பைக் திருட முயற்சித்த வழக்கில் விருதுநகர் மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்ததில் புளியங்குடியிலும் பைக் திருடியது தெரியவந்தது.இதுகுறித்து தகவலறிந்த புளியங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு பைக் திருட்டில் ஈடுபட்ட மேற்படி நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.மேலும் அவரிடமிருந்து திருடப்பட்ட பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News