சங்கரன்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

சங்கரன்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் சம்பவ இடத்தில் உயிரழந்தார்.

Update: 2021-05-08 17:30 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள களப்பாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் உடையார்(30). அவருடைய வீட்டின் அருகே துவைத்த துணிகளை காய வைக்க சென்ற போது மழை பெய்து கொண்டிருந்ததது.

அருகில் இருந்த மின்சார வயர் அறுந்து உடையார் மீது விழுந்தில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தில் உயிரழந்தார். தகவலறிந்த தாலுகா காவல்துறையினர் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..


Tags:    

Similar News