கரிவலம் வந்தநல்லூர் அருகே கோழிப்பண்ணையில் திருடிய வாலிபர் கைது

கரிவலம் வந்தநல்லூர் அருகே கோழிப்பண்ணையில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-11-30 10:15 GMT

கோழிப்பண்ணையில் திருடிய வாலிபர் 

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள கோமதி முத்துபுரத்தை சேர்ந்தவர் ஆபிரகாம் மகன் ஜேக்கப் ஜெயக்குமார்(42). இவர் கரிவலம் வந்தநல்லூர் அருகே,  கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இவரது கோழிப்பண்ணையில் அடிக்கடி கோழிகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறு பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிலையில், ஒரு வாலிபர் கோழி திருடியதை கண்ட ஊழியர்கள், அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் திருடிய வாலிபர் சங்கரன்கோவில் என்.ஜி.ஒ காலனியை சேர்ந்த சங்கர் மகன் ஹரிஹரசுதன்(21) என்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில், கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஹரிஹரசுதனை கைது செய்தனர்.

Tags:    

Similar News