சங்கரன்கோவில் அருகே விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்: எம்எல்ஏ பார்வை

சங்கரன்கோவிலில் விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்திய நிலங்களை சட்டமன்ற உறுப்பினர் ராஜா பார்வையிட்டார்.

Update: 2021-11-08 10:15 GMT

சங்கரன்கோவிலில் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்திய விவசாய நிலங்களை சட்டமன்ற உறுப்பினர் ராஜா பார்வையிட்டார்.

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்திய நிலங்களை சட்டமன்ற உறுப்பினர் ராஜா பார்வையிட்டார்.

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துமலை அடிவாரத்திலுள்ள தேவர்குளம் பஞ்சாயத்து, வன்னிக்கோனேந்தல் பஞ்சாயத்து, கரடிஉடைப்பு பஞ்சாயத்து, சீவலசமுத்திரம் பஞ்சாயத்து ஆகிய பகுதிகளில் காட்டுப்பன்றியின் அட்டகாசத்தினால் சேதமடைந்துள்ள விவசாய நிலங்களை பார்வையிட்டார்.

மேலும் அவர்களுக்கு உரிய நிவாரண நிதி கிடைத்திடவும், காட்டுபன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து விடுவிக்கவும் முயற்சி எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

Tags:    

Similar News