ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் முதியோர் நலத்திட்ட உதவி வழங்கல்

ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் முதியோர் நலத்திட்ட உதவிகளை, சபாநாயகர் அப்பாவு வழங்கினார்

Update: 2021-12-30 13:00 GMT

ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் முதியோர் நலத்திட்ட உதவிகளை, சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

ராதாபுரம் தொகுதியில் முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு, இன்று  வழங்கினார்.

ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள முதியோர்கள்,  மாற்றுதிறனாளிகள்,    இளம்விதவைகள்,  முதிர்கன்னிகள் கணவரால் கைவிடப்பட்டோர் உள்ளிட்ட மொத்தம் 211 பயனாளிகளுக்கு உதவிதொகையினை தாலுகா அலுவலகத்தில் சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வீ.எஸ்.ஆர். ஜெகதீஸ்,  இராதாபுரம் தாசில்தார் ஜேசுராஜன்,  ஒன்றிய செயலாளர் ஜோசப்பெல்சி, இராதாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பொன் மீனாட்சி,  இருக்கன்துறை ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News