நடிகர் விவேக் உயிரிழப்பு- சோகத்தில் மூழ்கிய கிராமம்

Update: 2021-04-17 11:15 GMT

நடிகர் விவேக் மாரடைப்பால் உயிரிழந்ததை அறிந்ததும் அவரது சொந்த ஊரை சேர்ந்த கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்ததும் சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் பகுதியில் உள்ள கிராமே சோகத்தில் மூழ்கி உள்ளது. சொந்த ஊருக்கு வந்தால் ஊர் மக்களுடன் எளிமையாக பழககூடியவர் விவேக் என்று ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். அவரது இழப்பை தங்களால் தாங்கி கொள்ள முடியவில்லை என்றும் விரைவில் நலமுடன் மீண்டு வருவார் என்று நம்பினோம். ஆனால் அவர் இறந்தது மிகவும் வருத்தமளிக்கிறது என சோகத்துடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News