நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சங்கரன்கோவில் பகுதியில் தீவிர வாகன சோதனை

சங்கரன்கோவில் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2022-01-28 15:15 GMT

சங்கரன்கோவில் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபடும் தேர்தல் பறக்கும் படையினர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகம் முன்பு காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சங்கரன்கோவில் நகர் பகுதிக்குள் வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தையும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

Tags:    

Similar News