சங்கரன்கோவிலில் அதிமுகவினர் 50 பேர் திமுகவில் இணைவு

சங்கரன்கோவில் அண்ணாநகர் பகுதியில் அதிமுகவினர் 50 பேர் திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Update: 2021-09-14 12:00 GMT

சங்கரன்கோவில் அண்ணாநகர் பகுதியில் அதிமுகவினர் 50 பேர் தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

சங்கரன்கோவில் அண்ணாநகர் பகுதியில் அதிமுகவினர் 50 பேர் தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரில் 9 மற்றும் 10வது வார்டுகளில் அண்ணாநகர் பகுதி உள்ளது. அண்ணாநகர் பகுதியில் அதிமுகவை சேர்ந்த 25 பெண்கள் உட்பட 50 பேர் இன்று தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவ பத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்தவர்களை மாவட்ட கழக செயலாளர்.வழக்கறிஞர்பொ.சிவ பத்மநாதன் கைத்தறி துண்டு அணிவித்து வரவேற்றார். நெசவாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சங்கை சரவணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தென்காசி நகர செயலாளர் சாதிர், மாவட்ட இளைஞரணி ராம் சரவணன், தொமுச முத்துக்குமார், 10 வது வார்டு செயலாளர் S.ஆறுமுகம், 7 வது வார்டு செயலாளர் R.S ஆறுமுகம், மாணவரணி வீரா என்ற வீராச்சாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News