பணியின் போது உயிர்நீத்த காவலரின் குடும்பத்திற்கு நிவாரண நிதி 3 லட்சம் வழங்கல்

பணியின் போது உயிர்நீத்த தலைமை காவலரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதி 3 லட்சம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்

Update: 2021-10-11 17:00 GMT

உயிர்நீத்த காவலரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கிய தென்காசி எஸ்பி. கிருஷ்ணராஜ்

பணியின் போது உயிர்நீத்த தலைமை காவலரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதி 3 லட்சம் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் வழங்கினார்.

தமிழக காவல்துறையில் பணியின்போது மரணமடைந்த காவல் ஆளிநர்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த கல்யாணசுந்தரம்  உடல்நலக் குறைவின் காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதி ரூ 3,00,000/- க்கான காசோலையை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  கிருஷ்ணராஜ் வழங்கினார்


Tags:    

Similar News