மாநில மாற்றுத்திறனாளிகள் கைப்பந்துப் போட்டி: கோப்பையை வென்றது கோவை அணி

அகஸ்தியர்பட்டியில் நடைபெற்ற மாநில மாற்றுத்திறனாளிகள் கைப்பந்து போட்டியில் கோவை அணி கோப்பையை வென்றது.

Update: 2021-12-14 04:30 GMT

கோப்பை மற்றும் ரூ.25 ஆயிரத்தை முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் வழங்கினார். 

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டி  கேம்பிரிட்ஜ் மெட்ரிக்பள்ளியில் நடந்த  மாற்று திறனாளிகளுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் கோவை மாவட்ட அணி   ஜோசப் நினைவு வெற்றிக் கோப்பையை தட்டி சென்றது.

கோப்பை மற்றும் ரூ.25 ஆயிரத்தை முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் வழங்கினார். பரிசளிப்பு விழாவுக்கு  கேம்பிரிஜ் மெட்ரிக் பள்ளி  சேர்மன் ராபர்ட் பெல்லார்மின் வரவேற்றார். இரண்டாம் பரிசு நெல்லை A அணிக்கு பால்துரை நினைவு கோப்பை மற்றும் ரூ 25 ஆயிரத்தை சிவந்திபுரம் தலைவர் ஜெகன் வழங்கினார்.

மூன்றாவது பரிசு நெல்லை B அணிக்கு வெள்ளி கோப்பை மற்றும் ரூ10 ஆயிரம் நெல்லை  க்ஷிபா கிளினிக் சார்பில் வழங்கப்பட்டது.  4  வது பரிசு லிண்டா நினைவு கோப்பை மற்றும் ரு3000/-  நெல்லை பாரா ஒலிம்பிக் கழகம் சர்பில் தூத்துக்குடி அணிக்கு கிடைத்தது. 

பரிசளிப்பு விழாவில் மாநில ஆக்கி  தலைவர் சேகர் மனோகரன்,  தமிழக கால்பந்து கழக துணை தலைவர் சுரேஷ் மனோகரன்,  விளையாட்டு தந்தை மனோகரன்  சாமுவேல் , கணேஷ் குமார் ஆதித்தன்,  அம்பை யூனியன் சேர்மன் பரணி சேகர், விகேபுரம் நகர செயலாளர் கணேசன், கவுன்சிலர் நெடுஞ்செழியன்,  ஷேக் முஜிபுர் ரஹ்மான், மைதீன் பிச்சை, சென்னை சில்க்ஸ் வினித் குமார்,  12  மாவட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். 

மலேசியா சென்று நெல்லை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த  இந்திய  கைபந்து வீரர்கள்  மாகபுகபகான்,  பெருமாள் ,முகம்மது ரிஸ்வான் மற்றும் சிறப்பாக விளையாடிய  வீரர்களுக்கும், அனைத்து வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. மழையையும் பொருட்படுத்தாமல் பார்வையாளர்கள்  போட்டிகளை கண்டு களித்தனர்.

Tags:    

Similar News