சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோயில் யானை கோமதிக்கு வனத்துறையினர் மருத்துவ பரிசோதனை

Update: 2021-07-24 15:15 GMT

சங்கரன்கோவில் கோயில்யானைக்கு வனத்துறையினர் மருத்துவபரிசோதனை செய்தனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் உள்ள யானை கோமதியின் மனநிலை ,உடல்நிலை உள்ளிட்ட செயல்பாடுகளை,  புளியங்குடி வனச்சரகர் ஸ்டாலின் மற்றும் வன காவலர் யோபு தலைமையில் பரிசோதனை செய்தனர். பின்பு , யானை கோமதியின் பாகன்களிடம் யானை நிற்கும் இடத்தில் மணல் நிரப்பவும் மண்ணுக்கும் யானைக்கும் உண்டான தொடர்பை நீடிக்கச் செய்ய வேண்டும் என்றும் கோயில் நிர்வாகத்திடம் அறிவுறுத்திச்சென்றனர்.

Similar News