சங்கரன்கோவிலில் டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் பலியானார்

சங்கரன்கோவில் கச்சேரி சாலையில் நடந்து சென்ற ஆட்டோ ஓட்டுனர் அப்பகுதியில் வந்த டிப்பர் லாரி மோதியதால் சம்பவ இடத்திலேயே பலியானார்

Update: 2021-07-19 12:00 GMT

 சங்கரன்கோவிலில் வளைவில் திரும்பும் போது லாரி மோதியதில்  நடந்து சென்ற ஆட்டோ டிரைவர் பலியானார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் கச்சேரி ரோட்டில் முத்துகிருஷ்ணபுரத்தை சேர்ந்த ஆட்டேர டிரைவர் சண்முகையா ( 65)  நடந்து சென்று கொண்டிருந்தபோது, சங்கரன் கோவில் திருநெல்வேலி பிரதான சாலையில் திரும்பி கொண்டிருந்த போது எதிர்பாபாராத விதமாக நிலை தடுமாறி விழுந்தார் .

இதில், லாரியின் பின்பக்க டயர் சண்முகையாவின் மீது ஏறி இறங்கியது. இதனால் சம்பவ இடத்திலேயே சண்முகையா  உயிரிழந்தார்.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் லாரியை பறிமுதல்  ஓட்டுனரை கைது செய்தனர். மேலும், சண்முகையாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

Tags:    

Similar News