சங்கரன்கோவில், புளியங்குடி பகுதிகளில் அதிகரிக்கும் மர்ம காய்ச்சல்

சங்கரன்கோவில், புளியங்குடி பகுதிகளில் அதிகரிக்கும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

Update: 2021-12-21 11:15 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், புளியங்குடி, கரிவலம்வந்தநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிரது. அதே நேரம், மர்ம காய்ச்சலால் சங்கரன்கோவில் புளியங்குடி, கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றால் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்பது கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே தமிழக அரசு சங்கரன்கோவில் பகுதியில் அதிகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

Tags:    

Similar News