மதுபாேதையில் ரேஷன் கடை ஊழியர்: பாெதுமக்கள் செய்த காரியம்
சங்கரன்கோவிலில் கூட்டுறவு நியாய விலை விற்பனை கடையில் பணியின் போது மது போதையில் இருந்த விற்பனையாளர் பணி இடைநீக்கம்.;
சங்கரன்கோவில் கூட்டுறவு நியாய விலை கடை.
சங்கரன்கோவிலில் கூட்டுறவு நியாய விலை விற்பனை கடையில் பணியின் போது மது போதையில் இருந்த விற்பனையாளர் பணி இடைநீக்கம்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தெற்கு ரத வீதியில் உள்ள கூட்டுறவு நியாய விலை விற்பனை கடையில் மதுபோதையில் விற்பனையாளர் சுந்தர் பணியில் இருந்துள்ளார்.
கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்ற பெண்கள் மற்றும் வாடிக்கையாளரிடம் உரிய விளக்கம் அளிக்காமல் மது போதையில் இருந்துள்ளார்.
இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து கூட்டுறவு சங்கத் தலைவர் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.