சங்கரன்கோவிலில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் தையல் இயந்திரம், முதியோர் உதவித்தொகை, சலவைப்பெட்டி, சொட்டுநீர் பாசான இயந்திரம், குடும்ப அட்டை உள்ளிட்ட நலத்ததிட்ட உதவிகள் வழங்கப்பட்டன
சங்கரன்கோவிலில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ், சட்டமன்ற உறுப்பினர் இராஜா உட்பட அனைத்துதுறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், முதியோர் உதவித்தொகை, சலவைப்பெட்டி, சொட்டுநீர் பாசான இயந்திரம், குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்ததிட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.
இதில், சங்கரன்கோவில் கோட்டாட்சியர், வட்டாட்சியர், வேளாண்துறை துணை இயக்குநர் உள்ளிட்ட அனைத்துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.