செட்டிகுளம் முத்தாரம்மன் கபடிக்குழு சார்பில் 37ம் ஆண்டு பொங்கல் விழா

செட்டிகுளம் முத்தாரம்மன் கபடிக்குழு சார்பில் 37ம் ஆண்டு பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது.;

Update: 2022-01-16 11:45 GMT

செட்டிகுளம் முத்தாரம்மன் கபடிக்குழு சார்பில் 37ம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது. 

கூடன்குளம் அருகிலுள்ள செட்டிகுளம் முத்தாரம்மன் கபடி கிளப் சார்பில் 37வது பொங்கல் விழாவையொட்டி பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றதன. இதில் கபடி போட்டி,  இசை,  நடனம்,   விளையாட்டு போன்ற போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விழா கமிட்டி தலைவர் தங்கபாண்டி நாடார் தலைமை தாங்கினார். வள்ளியூர் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெயசேகர் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர்களாக செட்டிகுளம் பஞ்சாயத்து தலைவர் அம்மா செல்வகுமார் மற்றும் பாஜக வர்த்தக அணி பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். மேலும் விழாவில் நூற்றுக்கு மேற்பட்ட ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. கபடி வீரர்களை கவுரவிக்கும் விதமாக பொன்னாடை அணிவிக்கபட்டது. இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முத்தாரம்மன் கபடிக்குழு தலைவர் முருகன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News