சங்கரன்கோவில் அருகே மனநலம் பாதித்தவருக்கு உதவிய போலீசார்

சங்கரன்கோவில் அருகே மனநலம் பாதிக்கப்பட்டவரை குளிக்க வைத்து புத்தாடை அணிவித்து சாப்பாடு கொடுத்த காவல்துறையினர்.

Update: 2022-01-12 06:45 GMT

சங்கரன்கோவில் அருகே மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு உதவி புரிந்த போலீசார்.

சங்கரன்கோவில் அருகே காவல் நிலையம் முன்பு நீண்ட காலமாக இருந்து வரும் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அழைத்து வந்து காவல் நிலையத்தில் குளிக்க வைத்து புத்தாடை அணிவித்து சாப்பாடு கொடுத்து மகிழ்ந்த காவல்துறையினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையம் முன்பு உள்ள சாலையோரம் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் நீண்ட காலமாக சரிவர உணவு, உடையின்றி மழையிலும் வெயிலிலும் இருந்துவருகிறார்.

நேற்று ஊரடங்கு என்பதால் பசியால் எழுந்திருக்கக் கூட முடியாமல் இருந்துள்ளார். இதனை அறிந்த கரிவலம்வந்தநல்லூர் காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையிலான காவல்துறையினர் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரை குளிக்க வைத்து, பின்னர் புத்தாடை அணிவித்து சாப்பாடு கொடுத்து மகிழ்ந்துள்ளனர்.

மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த நபரை அழைத்து வந்து அனைத்து உதவிகள் வழங்கிய காவல்துறையினரை அப்பகுதி மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News