சங்கரன்கோவில் அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்த கூலி தொழிலாளி உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்த கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

Update: 2021-10-05 04:15 GMT

சங்கரன்கோவில் அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்த கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் மாரியப்பன் (50) கூலி தொழிலாளி. இவர் கடந்த வாரம் குடும்பத் தகராறில் விஷம் குடித்து மயங்கி நிலையில் இருந்தார். அவரது உறவினர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சின்னக்கோவிலான்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News