கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை மீட்ட தீயணைப்புதுறையினர்

Update: 2021-07-03 06:36 GMT

ஆயாள்லபட்டி கிராமம் கனராஜ் என்பவரின் வெள்ளாடு 80 அடி ஆழ கிணற்றில் மாலை 6 மணி அளவில் கிணற்றில் தவறி விழுந்து விட்டது.

உடன் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விரைந்து சென்று மாவட்ட அலுவலர் கவிதா உத்தரவுப்படி நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் ஏட்டு கருப்பையா வெள்ளத்துரை வீரர்கள் முனியசாமி,கருப்பசாமி,முத்துகுமார் மற்றும் குழுவினருடன் ஆட்டை உயிருடன் மீட்பு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். மேற்படி சேவையை ஊர் பொதுமக்கள் மிகவும் பாராட்டினார்கள்.



Similar News