வள்ளியூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125 வது பிறந்தநாள் விழா கொண்டாடட்டம்

வள்ளியூர் புதியபஸ்நிலையம் முன்பாக உள்ள உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

Update: 2022-01-23 12:00 GMT

வள்ளியூர் புதிய பஸ் நிலையம் முன்பாக உள்ள உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

வள்ளியூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி மாவட்டம், வள்ளியூர் புதிய பஸ் நிலையம் முன்பாக உள்ள உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் தேமுதிக மாவட்ட கழக செயலாளர் விஜி வேலாயுதம், பாரதிய ஜனதா கட்சி நகர தலைவர் சிவராம குட்டி,  வழக்கறிஞர் அணி செயலாளர் ராம்நாத் ஐயர், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் ரமேஷ் கண்ணன், சிலை பாதுகாப்பு குழு தலைவர் மகா கணேசன், நிர்வாகிகள் பசுமதி, மணி சித்திரை குமா,ர் டாக்ஸி ஓட்டுனர் சங்க நிர்வாகிகள் லட்சுமணன், கணேசன், சுப்பையா, பாலகிருஷ்ணன், வாகைகுளம் நேதாஜி நட்பு கோட்டை நிர்வாகிகள், வள்ளிநாயகம், மதன், மணி, முத்து, சங்கர், நவீன், சேதுராமன், நம்பிராஜன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News