சங்கரன்கோவில் அருகே காணாமல் போனவர் கிணற்றில் சடலமாக மீட்பு

சங்கரன்கோவில் அருகே 2 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனவர் கிணற்றில் பிணமாக மீட்பு.

Update: 2021-12-06 04:45 GMT

பைல் படம்.

சங்கரன்கோவில் அருகே 2 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனவர் கிணற்றில் பிணமாக மீட்பு..

 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஊத்தான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் மாரியப்பன் (52). இவர் குடும்பத்தை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வருகிறார். மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சின்னக்கோவிலான்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஊத்தான்குளம் ஊருக்கு அருகே உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் சின்ன கோவிலான் போலீசார் மற்றும் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் மாரியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சின்னக்கோவிலான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News