சங்கரன்கோவிலில் டூவீலர் மீது மினி லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு

Today Accident News in Tamil - சங்கரன்கோவிலில் டூவீலர் மீது மினி லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2022-09-13 05:21 GMT

பைல் படம்.

Today Accident News in Tamil-தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள இராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மகேந்திரன் மற்றும் ஆகாஷ். இவர்கள் இருவரும்  செங்கோட்டை சென்றுவிட்டு சொந்த ஊரான இராமநாதபுரம் திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது சங்கரன்கோவில் புளியங்குடி மாநில நெடுஞ்சாலையில் வடக்குபுதூரை அடுத்து வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த மினி லாரியில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆகாஷ் மற்றும் மகேந்திரன் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சங்கரன்கோவில் தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து சங்கரன்கோவில் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News